அலங்கார வாசலாலே 1. அலங்கார வாசலாலே கோவிலுக்குள் போகிறேன்; தெய்வவீட்டின் நன்மையாலே ஆத்துமத்தில் பூரிப்பேன்; இங்கே தெய்வ சமுகம், மெய் வெளிச்சம், பாக்கியம் 2. கர்த்தரே, உம்மண்டை வந்த என்னண்டைக்கு வாருமேன். நீர் இறங்கும்போதனந்த இன்பத்தால் மகிழுவேன். என்னுட இதயமும் தெய்வ ஸ்தலமாகவும். 3. பயத்தில் உம்மண்டை சேர, என் ஜெபம் புகழ்ச்சியும் நல்ல பலியாக ஏற உமதாவியைக் கொடும். தேகம் ஆவி யாவையும் சுத்தமாக்கியருளும். 4. நல்ல நிலத்தில் விழுந்த விதை பயிராகுமே; நானும் அவ்வாறே மிகுந்த கனிகளைத் தரவே, வசனத்தைக் காக்க நீர் ஈவளிக்கக் கடவீர்.