எத்தனை நாவால் பாடுவேன் 1. எத்தனை நாவால் பாடுவேன் என் மீட்பர் துதியை! என் ஆண்டவர் என் ராஜனின் மேன்மை மகிமையை! 2. பாவிக்கு உந்தன் நாமமோ ஆரோக்கியம் ஜீவனாம்; பயமோ துக்க துன்பமோ ஓட்டும் இன்கீதமாம். 3. உமது சத்தம் கேட்குங்கால் மரித்தோர் ஜீவிப்பார்; புலம்பல் நீங்கும் பூரிப்பால் நிர்ப்பாக்கியர் நம்புவார். 4. ஊமையோர் செவிடோர்களும் அந்தகர் ஊனரும், உம் மீட்பர் போற்றும்! கேட்டிடும்! நோக்கும் குதித்திடும். 5. என் ஆண்டவா, என் தெய்வமே, பூலோகம் எங்கணும் பிரஸ்தாபிக்க உம் நாமமே பேர் அருள் ஈந்திடும்.