சிலுலையில் சேருவேன் 1. சிலுலையில் சேருவேன் ஏழை ஈனக் குருடன் ; உலகம் குப்பை என்கிறேன்; பூரண மீட்சி பெற்றவன். கர்த்தா! உம்மை நம்புவேன் கல்வாரிப் பலியே நீர்! சிலுவை யண்டை தாழ்வேன் அப்போ இயேசே இரட்சிப்பீர்! 2. நெடும் வாஞ்சை உமக்காய் ஆயின் ஆண்டது தீமை இயேசு சொல்வார் இன்பமாய் , "தீர்ப்பேன் முற்றாய்ப் பாவத்தை". 3. ஈவேன் உமக்கே யாவும் இனம், வாழ்நாள், செல்வமும் ஆன்மா உடல் முழுதும், உமக்கென்றே என்றைக்கும். 4. வாக்குத் தத்தம் நம்புவேன் உணர்வேன் திருஇரத்தம் மண்ணில் தாழ்ந்து விழுவேன் அறையுண்டேன் கிறிஸ்தோடும். 5. சேர்வார்! ஆன்மா நிறையும் அவரே என் பூரிப்பு; அடைந்தேன் சொஸ்தம் முற்றும் ஆட்டுக்குட்டிக்கே மாண்பு.