உறுதி வாக்கிதுவே;
ஆறுதல் தேறுதல் செய்யும்
சபையை உயிர்ப்பிக்குமே.
அருள் ஏராளம்,
அருள் அவசியமே;
அற்பமாய் சொற்பமாய் அல்ல,
திரளாய் பெய்யட்டுமே.
2. அருள் ஏராளமாய்ப் பெய்யும்
மேக மந்தாரமுண்டாம்;
காடான நிலத்திலேயும்
செழிப்பும் பூரிப்புமாம்.
அருள் ஏராளம்,
அருள் அவசியமே;
அற்பமாய் சொற்பமாய் அல்ல,
திரளாய் பெய்யட்டுமே.
3. அருள் ஏராளமாய்ப் பெய்யும்
இயேசு வந்தருளுமேன்;
இங்குள்ள கூட்டத்திலேயும்
கிரியை செய்தருளுமேன்.
அருள் ஏராளம்,
அருள் அவசியமே;
அற்பமாய் சொற்பமாய் அல்ல,
திரளாய் பெய்யட்டுமே.
4. அருள் ஏராளமாய்ப் பெய்யும்
பொழியும் இச்சணமே;
அருளின் மாரியைத் தாரும்
ஜீவ தயாபரரே.
அருள் ஏராளம்,
அருள் அவசியமே;
அற்பமாய் சொற்பமாய் அல்ல,
திரளாய் பெய்யட்டுமே.