அன்போடு எண்ணி ஜீவிப்பேன்
அந்நாளில் பெற்ற ஈவையே
சந்தோஷமாய்க் கொண்டாடுவேன்.
இன்பநாள்! இன்பநாள்!
என் பாவம் தீர்ந்துபோன நாள்!
பேரன்பர் என்னை ரட்சித்தார்
சீராக்கி இன்பம் நல்கினார்!
இன்பநாள்! இன்பநாள்!
என் பாவம் தீர்ந்துபோன நாள்!
2. இம்மானுவேல் இப்பாவியைத்
தம் சொந்தமாக்கிக் கொண்டனர்;
சந்தேகம் நீக்கி மன்னிப்பைத்
தந்தென்னை அன்பாய்ச் சேர்த்தனர்.
3. என் உள்ளமே, உன் மீட்பரை
என்றைக்கும் சார்ந்து வாழுவாய்;
ஆருயிர் தந்த நாதரை
ஒர்க்காலும் விட்டு நீங்கிடாய்.
4. ஆட்கொண்ட நாதா, என்தனை
நாடோறும் தத்தஞ் செய்குவேன்;
பின் மோட்ச வீட்டில் பேரன்பை
இன்னோசையாலே பாடுவேன்.