பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே
1. சருவத்தையும் படைத்தாண்ட சருவவல்லவர்(2) - இங்கு
தாழ்மையுள்ள தாய்மடியில் தலைசாய்கலானார். (2)
பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே - இன்னும்
பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே
2. சிங்காசனம் வீற்றிருக்கும் தேவமைந்தனார் (2) - இங்கு
பங்கமுற்ற பசுத்தொட்டிலில் படுத்திருக்கிறார். (2)
பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே - இன்னும்
பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே
3. முன்னம் அவர் சொன்னபடி முடிப்பதற்காக (2) - இங்கு
மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே (2)
பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே - இன்னும்
பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே
4. ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங்கொண்டோர் (2) - இங்கு
ஆக்களுட சத்தத்துக்குள் அழுது பிறந்தார். (2)
பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே - இன்னும்
பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே
5. இவ்வளவாய் அன்பு வைத்த எம்பெருமானை (2) - நாம்
எண்ணமுடன் போய்த்துதிக்க ஏகிடுவோமே. (2)
பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே - இன்னும்
பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே