எழுந்தார் இறைவன் எழுந்தார் இறைவன், - ஜெயமே ஜெயமெனவே எழுந்தார் இறைவன். (2) 1. விழுந்தவரைக் கரையேற்றப், - பாவத் தழுந்து மனுக்குலத்தை மாற்ற, (2) விண்ணுக் கெழுந்து நாம் அவரையே போற்ற, எழுந்தார் இறைவன், - ஜெயமே ஜெயமெனவே எழுந்தார் இறைவன். 2. செத்தவர் மீண்டும் பிழைக்க, - உயர் நித்திய ஜீவனை அளிக்கத், (2) - தேவ பக்தர் யாவரும் களிக்க, எழுந்தார் இறைவன், - ஜெயமே ஜெயமெனவே எழுந்தார் இறைவன். 3. கருதிய காரியம் வாய்க்கத், - தேவ சுருதி மொழிகளெல்லாம் காக்க, (2) - நம் இரு திறத்தாரையும் சேர்க்க, - எழுந்தார் இறைவன், - ஜெயமே ஜெயமெனவே எழுந்தார் இறைவன். 4. சாவின் பயங்கரத்தை ஒழிக்கக், - கெட்ட ஆவியின் வல்லமையை அழிக்க, (2) - இப் பூவின் மீதுசபை செழிக்க, எழுந்தார் இறைவன், - ஜெயமே ஜெயமெனவே எழுந்தார் இறைவன். 5. ஏதந் தீவினை செய்யாத் தூயன், - எப் போதுமே நன்மைபுரி நேயன், (2) - தப் பாது காத்திடும் நல்லாயன், எழுந்தார் இறைவன், - ஜெயமே ஜெயமெனவே எழுந்தார் இறைவன்.