சுப ஜெய மங்களமே சுப ஜெய மங்களமே - நித்திய சுபஜெய மங்களமே, சுகமே தரவே புவிமீ துயிர்த்த சுதனேசு நாதருக்கே. 1. தீர்க்க ருரைத்தனரே நின்று இயேசு உயிர்த்தனரே; ஜெகதீஸ் பரனார் சுதனார் கிறிஸ்து ஜெயமா யெழுந்தவர்க்கே. சுப ஜெய மங்களமே - நித்திய சுபஜெய மங்களமே, சுகமே தரவே புவிமீ துயிர்த்த சுதனேசு நாதருக்கே. 2. தூதர் சங்க முழங்க வானம் ஜோதியினா லிலங்கத் துரிதாய்ப் பரனார் களிகூர்ந் திடவே தொனியா யெழுந்தவர்க்கே. சுப ஜெய மங்களமே - நித்திய சுபஜெய மங்களமே, சுகமே தரவே புவிமீ துயிர்த்த சுதனேசு நாதருக்கே. 3. அங்கங் குளிர்ந்திடவே, - உல கெங்கும் மகிழ்ந்திடவே, அடியா ருடசா வுடகூ ரொடித்து அகில மெழுந்தவர்க்கே. சுப ஜெய மங்களமே - நித்திய சுபஜெய மங்களமே, சுகமே தரவே புவிமீ துயிர்த்த சுதனேசு நாதருக்கே. 4. காலையில் எழுந்து நிதம் கர்த்தனையே நினைத்துக் கரமே குவித்துத் துதிபா டிடவே காலை யிலெழுந்தவர்க்கே சுப ஜெய மங்களமே - நித்திய சுபஜெய மங்களமே, சுகமே தரவே புவிமீ துயிர்த்த சுதனேசு நாதருக்கே. 5. ஆனந்தம் பாடிடவும், பரன் அன்பைக் கொண்டாடிடவும், அசையா நிலையோ டெழுந்து தொழவே அருள் கூர்ந்திடு பவர்க்கே. சுப ஜெய மங்களமே - நித்திய சுபஜெய மங்களமே, சுகமே தரவே புவிமீ துயிர்த்த சுதனேசு நாதருக்கே. 6. எக்காளமே தொனிக்க பக்தர் யாவருமே யெழும்ப இனிதாய் அரசா ளவுமேயுலகில் எழு மிம்மானு வேலர்க்கே. சுப ஜெய மங்களமே - நித்திய சுபஜெய மங்களமே, சுகமே தரவே புவிமீ துயிர்த்த சுதனேசு நாதருக்கே.