இழிஞன் எனை மீட்டருள்,
யேசுவே கிரு பாசனப்பதியே.
1. காசினியில் உன்னை அன்றி, தாசன் எனக் காதரவு
கண்டிலேன், சருவ வல்ல மண்டலாதிபா! (2)
நேசமாய் ஏழைக்கிரங்கி, மோசம் அணுகாது காத்து,
நித்தனே, எனை திருத்தி, வைத்தருள் புத்தி வருந்தி.
யேசுவே கிரு பாசனப்பதியே.
2. பேயுடைச் சிறையதிலும், காய வினைக் கேடதிலும்,
பின்னமாகச் சிக்குண்ட துர்க் கன்மி ஆயினேன்; (2)
தீயரை மீட்கும் பொருளாய் நேயம் உற்றுதிரம் விட்ட
தேவனே, எனைக்கண் நோக்கித் தீவினை அனைத்தும் நீக்கி.
யேசுவே கிரு பாசனப்பதியே.
3. சிறைப்படுத்தினவற்றைச் சிறையாக்கி விட்ட அதி
தீரமுள்ள எங்கள் உப கார வள்ளலே, (2)
குறை ஏதுனை அண்டினோர்க் கிறைவா? எனைச் சதிக்கும்
குற்றங்கள் அறவே தீர்த்து, முற்று முடியக் கண பார்த்து.
யேசுவே கிரு பாசனப்பதியே.
4. பொல்லா உலகம் இதில் நல்லார் எவரும் இல்லை,
புண்ணியனே உன் சரணம் நண்ணி அண்டினேன்; (2)
எல்லார்க்கும் எல்லாம் நீ அல்லோ எனக்குதவி?
இந்நாள் அருள் புரிந்து உன் ஆவியை சொரிந்து.
யேசுவே கிரு பாசனப்பதியே.
இழிஞன் எனை மீட்டருள்,
யேசுவே கிரு பாசனப்பதியே.