வாரா வினை வந்தாலும் சோராதே
வாரா வினை வந்தாலும் சோராதே, மனமே;
வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே, (2)
வாரா வினை வந்தாலும் சோராதே, மனமே;
1. சூரன் சதித்துன் மீது வலை வீசினாலும், (2)
சோராதே, ஏசபரன் தஞ்சம் விடாதே; (2)
வாரா வினை வந்தாலும் சோராதே, மனமே;
2. உலகம் எதிர்த்துனக்கு மலைவுசெய்தாலும் (2)
உறுதிவிட்டயராதே நெறி தவறாதே; (2)
வாரா வினை வந்தாலும் சோராதே, மனமே;
3. பெற்ற பிதாப்போல் உன் குற்றத் எண்ணாரே (2)
பிள்ளை ஆகில் அவர் தள்ளிவிடாரே. (2)
வாரா வினை வந்தாலும் சோராதே, மனமே;
4. தன் உயிர் ஈந்திட்ட உன் யேசுநாதர் (2)
தள்ளுவரோ? அன்பு கொள்ளவர் மீதே. (2)
வாரா வினை வந்தாலும் சோராதே, மனமே;
5. மரணம் உறுகின்ற தருணம் வந்தாலும், (2)
மருள விழாதே நல் அருளை விடாதே. (2)
வாரா வினை வந்தாலும் சோராதே, மனமே;
6. வையகமே உனக்குய்ய ஓர் நிலையோ? (2)
வானவனை முற்றும் தான் அடைவாயே! (2)
வாரா வினை வந்தாலும் சோராதே, மனமே;
வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே, (2)