சத்திய வேதத்தைத் தினம் தியானி சத்திய வேதத்தைத் தினம் தியானி, சகல பேர்க்கும் அதபிமானி. (2) உத்தம ஜீவிய வழிகாட்டும் உயர்வானுலகில் உனைக்கூட்டும். சத்திய வேதத்தைத் தினம் தியானி, சகல பேர்க்கும் அதபிமானி. 1. வாலிபர் தமக்கூண் அதுவாகும் வயோதியர்க்கும் அதுணவாகும்; பாலகர்க்கினிய பாலும் அதாம் படிமீ தாத்மபசி தணிக்கும். சத்திய வேதத்தைத் தினம் தியானி, சகல பேர்க்கும் அதபிமானி. 2. சத்துருப் பேயுடன் அமர்புரியும் தருணம் அது நல் ஆயுதமாம்; புத்திரர் மித்திரரோடு மகிழும் பொழுதும் அதுநல் உறவாகும். சத்திய வேதத்தைத் தினம் தியானி, சகல பேர்க்கும் அதபிமானி. 3. புலைமேவிய மானிட ரிதயம் புனிதம் பெறுதற்கதுமருந்தாம்; நிலையா நரர்வாணாள் நிலைக்க நேயகாய கற்பம் அதாம் சத்திய வேதத்தைத் தினம் தியானி, சகல பேர்க்கும் அதபிமானி. 4. கதியின் வழிகாணாதவர்கள் கண்ணுக்கரிய கலிக்கம் அது புதிய எருசாலேம்பதிக்குப் போகும் பயணத் துணையும் அது, சத்திய வேதத்தைத் தினம் தியானி, சகல பேர்க்கும் அதபிமானி. 5. மாந்தர் ரக்ஷிப்படையும் வழி வழுத்தும் தேவ வார்த்தை அது வேந்தர் அமைச்சர் முதலெவர்க்கும் விதித்த பிரமாணமும் அதுவே, சத்திய வேதத்தைத் தினம் தியானி, சகல பேர்க்கும் அதபிமானி.