ஆனந்தமே! ஜெயா! ஜெயா ஆனந்தமே! ஜெயா! ஜெயா! அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம். ஞானரட்சகர், நாதர் நமை (2) இந்த நாள்வரை ஞாலமதினில் காத்தார் - புகழ், ஆனந்தமே! ஜெயா! ஜெயா! அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம். 1. சங்கு கனம், வளர் செங்கோலரசிவை தளராதுள கிறிஸ்தானவராம், எங்கள் ரட்சகரேசு நமை (2) வெகு இரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால் – புகழ் ஆனந்தமே! ஜெயா! ஜெயா! அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம். 2. முந்து வருட மதினில் மனுடரில் வெகு மோசகஸ்திகள் தனிலேயுழல, தந்து நமக்குயிருடையுணவும் (2) வெகு தயவுடன் இயேசு தற்காத்ததினால். – புகழ் ஆனந்தமே! ஜெயா! ஜெயா! அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம். 3. பஞ்சம் பசிக்கும் பட்டயத்துக்கும் வெகு கொடும் பாழ் கொள்ளை நோய் விஷதோஷத்திற்கும், தஞ்ச ரட்சகர் தவிர்த்து நமை (2) இத்தரை தனில் குறை தணித்தாற்றியதால், – புகழ் ஆனந்தமே! ஜெயா! ஜெயா! அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்.