எந்நாளுமே துதிப்பாய் எந்நாளுமே துதிப்பாய் - என்னாத்துமாவே , நீ எந்நாளுமே துதிப்பாய்! இந்நாள் வரையிலே உன்னதனார் செய்த; (2) எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது, எந்நாளுமே துதிப்பாய்! 1. பாவங்கள் எத்தனையோ, - நினையா திருத்தாருன் பாவங்கள் எத்தனையோ? பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப் (2) பாரினில் வைத்த மகா தய வைஎண்ணி, எந்நாளுமே துதிப்பாய்! 2. எத்தனையோ கிருபை, - உன்னுயிர்க்குச் செய்தாரே, எத்தனையோ கிருபை? நித்தமுனைமுடி சூட்டினதுமன்றி, (2) நித்தியமான ஜீவனை மீட்டதால், எந்நாளுமே துதிப்பாய்! 3. நன்மையாலுன் வாயை - நிறைத்தாரே, பூர்த்தியாய் நன்மையாலுன் வாயை! உன் வயது கழுகைப்போல் பலங்கொண்டு, (2) ஓங்கு இளமைபோ லாகவே செய்ததால், எந்நாளுமே துதிப்பாய்! 4. பூமிக்கும் வானத்துக்கும் - உள்ள தூரம் போலவே, பூமிக்கும் வானத்துக்கும்; சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள் (2) சாலவும் தங்குமே, சத்திய மேயிது, எந்நாளுமே துதிப்பாய்! 5. மன்னிப்பு மாட்சிமையாம் - மாதேவனருளும் மன்னிப்பு மாட்சிமையாம்; எண்ணுவாயோ கிழக்கும் மேற்கும் தூரமே? (2) எல்லாம் உன்பாவம் அகன்றதத்தூரமே, எந்நாளுமே துதிப்பாய்! 6. தந்தைதன் பிள்ளைகட்கு - தயவோ டிரங்கானோ தந்தைதன் பிள்ளைகட்கு? எந்த வேளையும் அவரோடு தங்கினால், (2) ஏற்றிப் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே, எந்நாளுமே துதிப்பாய் - என்னாத்துமாவே , நீ எந்நாளுமே துதிப்பாய்!