பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே.
பரிசுத்த அலங்காரத்துடனே
தரிசிப்பதினால், சரணம், சரணம்.
தொழுகிறோம் எங்கள் பிதாவே,
பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே.
1. நன் நலங்கட்கோர் முதலே
நற்சேயை நீர் தந்ததாலே
திரித்துவ யேகத்துவனே
திரிலோகனே சரணம், சரணம்.
தொழுகிறோம் எங்கள் பிதாவே,
பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே.
2. பாவிநேசன் பாவநாசன்
பரம பாசன் வரமே வாசன்
துங்கா சிங்கன் மங்காத் தங்கள்
துய்ய அங்கனே சரணம், சரணம்.
தொழுகிறோம் எங்கள் பிதாவே,
பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே.
3. பார்த்திபனே கனஸ்தோத்திரம்
கீர்த்தனம் மங்களம் ஸ்தோத்திரம்
வாழ்க, வாழ்க, வாழ்க என்றும்
அல்லேலூயா, ஆமென், ஆமென்.
தொழுகிறோம் எங்கள் பிதாவே,
பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே.