எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே 1. எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே நான் உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன்; உம்மைப்போல் ஒரு தேவனைப் பூமியில் அறிந்திடேன் உயிர் தந்த தெய்வமே நீர். ஆ! ஆனந்தம், ஆனந்தமே! அல்லும், பகலிலும் பாடிடுவேன். இயேசுவே எந்தன் ஆருயிரே! 2. பெற்ற தாயும் என் தந்தையும் ஆனவரே மற்றும் எல்லாம் எனக்கு நீரே; வானம் பூமியும் யாவுமே மாறிடினும் நீரே வாக்கு மாறாதவரே. ஆ! ஆனந்தம், ஆனந்தமே! அல்லும், பகலிலும் பாடிடுவேன். இயேசுவே எந்தன் ஆருயிரே! 3. உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரே உந்தன் நாமத்தை நம்பிடுவேன்; உம்மையல்லாதிப் பூமியில் யாரையும் நம்பிடேன் உயிருள்ள தெய்வமே நீர். ஆ! ஆனந்தம், ஆனந்தமே! அல்லும், பகலிலும் பாடிடுவேன். இயேசுவே எந்தன் ஆருயிரே! 4. பொன் வெள்ளியுமோ பெரும்பேர் புகழோ பணம் ஆஸ்தியும் வீண் அல்லவோ; பரலோகத்தின் செல்வமே என் அரும் இயேசுவே போதும் எனக்கு நீரே. ஆ! ஆனந்தம், ஆனந்தமே! அல்லும், பகலிலும் பாடிடுவேன். இயேசுவே எந்தன் ஆருயிரே!