உன்னத தேவன் உன்னை அழைக்கின்றார் உன்னத தேவன் உன்னை அழைக்கின்றார் நம்பியே வந்திடுவாய், நம்பியே வந்திடுவாய் சிலுவை சுமந்தே உனக்காய் அவர் மரித்தாரே. (2) 1. பாவத்தால் அழியாதே தேவனை மறவாதே (2) இருதயத்தைத் தட்டுகிறார் இன்றதைத் திறந்தளிப்பாய்.(2) உன்னத தேவன் உன்னை அழைக்கின்றார் நம்பியே வந்திடுவாய், நம்பியே வந்திடுவாய் சிலுவை சுமந்தே உனக்காய் அவர் மரித்தாரே (2) 2. இன்று உன் ஜீவன் போனால் எங்கு நீ சென்றிடுவாய் (2) இந்த வேளை சிந்தனை செய் இயேசுன்னை அழைக்கிறாரே (2) உன்னத தேவன் உன்னை அழைக்கின்றார் நம்பியே வந்திடுவாய், நம்பியே வந்திடுவாய் சிலுவை சுமந்தே உனக்காய் அவர் மரித்தாரே (2) 3. நரகத்தின் பாதையிலும் மரணத்தின் பாதையிலும் (2) உல்லாசமாய் நடப்பது ஏன் உண்மையாய் அழிந்திடுவாய். (2) உன்னத தேவன் உன்னை அழைக்கின்றார் நம்பியே வந்திடுவாய், நம்பியே வந்திடுவாய் சிலுவை சுமந்தே உனக்காய் அவர் மரித்தாரே (2) 4. தம்மிடம் வருபவரைத் தள்ளிடவே மாட்டார் (2) அன்புகரம் விரித்தவராய் ஆண்டவர் அழைக்கிறாரே. (2) உன்னத தேவன் உன்னை அழைக்கின்றார் நம்பியே வந்திடுவாய், நம்பியே வந்திடுவாய் சிலுவை சுமந்தே உனக்காய் அவர் மரித்தாரே (2)