பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர் பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர் பாரினில் பலியாக மாண்டாரே (2) பரிசுத்தரே பாவமானாரே பாரமான சிலுவை சுமந்தவரே பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர் பாரினில் பலியாக மாண்டாரே. 1. காட்டிக் கொடுத்தான் முப்பது வெள்ளிக் காசுக்காகவே கர்த்தன் இயேசுவை. (2) கொலை செய்யவே கொண்டு போனானே கொல்கொதா மலைக்கு இயேசுவை. (2) பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர் பாரினில் பலியாக மாண்டாரே. 2. கள்ளர் மத்தியில் ஒரு கள்ளன் போல் குற்றமற்ற கிறிஸ்தேசு தொங்கினார். (2) பரிகாசமும் பசி தாகமும் படுகாயமும் அடைந்தாரே. (2) பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர் பாரினில் பலியாக மாண்டாரே. 3. கால்கள் கைகளில் ஆணி பாய்ந்திட க்ரீடம் முள்களில் பின்னி சூடிட. (2) இரத்த வெள்ளத்தில் கர்த்தர் தொங்கினார் இதைக்காணும் உள்ளம் தாங்குமோ? (2) பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர் பாரினில் பலியாக மாண்டாரே. 4. உலகத்தின் இரட்சகர் இயேசுவே உயிர் கொடுத்தார் உயிர்த்தெழுந்தார் (2) தம்மை நம்பினால் உன்னைக்கைவிடார் தளராமல் நம்பி ஓடிவா. (2) பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர் பாரினில் பலியாக மாண்டாரே. 5. பாவ சாபங்கள் தீரா வியாதிகள் பல தோல்விகள் உந்தன் வாழ்கையில். (2) கண்டு நீ மனம் கலங்குவதேன்? கர்த்தன் இயேசுவண்டை ஓடிவா. (2) பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர் பாரினில் பலியாக மாண்டாரே. 6. வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே வாருங்கள் என்னண்டையில் என்கிறார். (2) இளைப்பாறுதல் தரும் இயேசுவை இன்று தேடி நாடி நம்பிவா. (2) பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர் பாரினில் பலியாக மாண்டாரே.