பாவம் பெருகுதே பாவம் பெருகுதே! பாரும் பரன் இயேசுவே! அழியும் மனுக்குலம் அதையும் இரட்சிப்பீரே! (2) 1. ஆத்துமா இரட்சிப்பிழந்தவர் ஆயிரம் ஆயிரமாய் (2) அன்றாடகம் இந்த மண்ணடியில் அழிந்து சாகின்றாரே! (2) பாவம் பெருகுதே! பாரும் பரன் இயேசுவே! அழியும் மனுக்குலம் அதையும் இரட்சிப்பீரே! 2. இரட்சிப்பின் நற்செய்தி கேட்டவர் எச்சரிப்பை வெறுத்து (2) இரட்சகர் இயேசுவை இழந்தோராய் இன்றும் கெட்டழிகின்றார்!(2) பாவம் பெருகுதே! பாரும் பரன் இயேசுவே! அழியும் மனுக்குலம் அதையும் இரட்சிப்பீரே! 3. தானியேல் போல ஜெபித்திடும் தாசர் பலர் மறைந்தார்! (2) திறப்பின் வாசலில் நிற்கும் பலர் தூங்கிக் களைத்துப் போனார்! (2) பாவம் பெருகுதே! பாரும் பரன் இயேசுவே! அழியும் மனுக்குலம் அதையும் இரட்சிப்பீரே! 4. எமது காரியமாகவே யாரை அனுப்பிடுவேன் (2) என்றவர் அழைக்கும் இன்ப சத்தம் என்னுள்ளம் தொனிக்குதே! (2) பாவம் பெருகுதே! பாரும் பரன் இயேசுவே! அழியும் மனுக்குலம் அதையும் இரட்சிப்பீரே! 5. ஜீவனை வெறுத்துத் தியாகமாய் சேவையும் செய்திடுவேன் (2) ஜீவனுக்கீடாக ஜனங்களை ஜீவ தேவன் தருவார்! (2) பாவம் பெருகுதே! பாரும் பரன் இயேசுவே! அழியும் மனுக்குலம் அதையும் இரட்சிப்பீரே! 6. வெறுங் கையாய் பரலோகத்தில் வந்திடேன் இயேசு நாதா (2) ஆத்துமா ஆதாயம் செய்திடவே ஆசீர் பொழிந்தனுப்பும்! (2) பாவம் பெருகுதே! பாரும் பரன் இயேசுவே! அழியும் மனுக்குலம் அதையும் இரட்சிப்பீரே!