பாவத்தின் பாரத்தினால் 1. பாவத்தின் பாரத்தினால் தவித்திடும் பாவி என்னை நின் கிருபை பிரவாகத்தால் தேற்றிடும் இயேசு நாதா. 2. கெட்ட குமாரனைபோல் துஷ்டனாய் அலைந்தேனப்பா நின் அன்பை உணராமல் துரோகம் நான் செய்தேனே. 3. பாவி மரியாளையும் நன்றியற்ற பேதுருவையும் அருள் செய்த ஆண்டவனே கிருபைகூர் என் ஐயனே. 4. அறையுண்ட சிலுவையினின்று அணைத்திட வாருமையா நின்பாதம் வீழ்ந்தேனையா சமாதானம் தாருமையா.