ஆறுதலின் தெய்வமே ஆறுதலின் தெய்வமே உம்முடைய திருச்சமூகம் எவ்வளவு இன்பமானது. (2) 1. ஆத்துமா தேவனே உம்மையே நோக்கி ஆர்வமுடன் கதறுகின்றது. (2) உள்ளமும் உடலும் ஒவ்வொரு நாளும். (2) கெம்பீரித்து சத்தமிடுது - ஆமென். (2) 2. உம்முடைய சந்நிதியில் தங்கியிருப்போர் உண்மையிலே பாக்கியவான்கள். (2) தூய மனதுடன் துதிப்பார்கள். (2) துதித்துக் கொண்டிருப்பார்கள் - ஆமென் (2) ஆறுதலின் தெய்வமே உம்முடைய திருச்சமூகம் எவ்வளவு இன்பமானது. 3. உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம் உண்மையிலே பாக்கியவான்கள். (2) ஓடினாலும் களைப்படையார். (2) நடந்தாலும் சோர்வடையார் - ஆமென் (2) ஆறுதலின் தெய்வமே உம்முடைய திருச்சமூகம் எவ்வளவு இன்பமானது. 4. கண்ணீரின் பாதையில் நடக்கும்போதெல்லாம் களிப்பான நீருற்றாய் மாற்றிக்கொள்வார்கள். (2) வல்லமை மேலே வல்லமை கொண்டு (2) சீயோனைக் காண்பார்கள் - ஆமென் (2) ஆறுதலின் தெய்வமே உம்முடைய திருச்சமூகம் எவ்வளவு இன்பமானது. 5. வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதைவிட உம்மிடத்தில் ஒரு நாள் மேலானது. (2) ஒவ்வொரு நாளும் உமது இல்லத்தின் (2) வாசலில் காத்திருப்பேன் - ஆமென் (2) ஆறுதலின் தெய்வமே உம்முடைய திருச்சமூகம் எவ்வளவு இன்பமானது.