இயேசு என்னும் நாமமே - என் ஆத்துமாவின் கீதமே - என் நேசரேசுவை நான் என்றும் ஏற்றி மகிழ்ந்திடுவேன்
2. கோர பயங்கரமான புயலில் கொடிய அலையின் மத்தியில் காக்குங் கரங்கொண்டு மார்பில் சேர்த்தணைத்த அன்பை என்றும் பாடுவேன் --- இயேசு 3. யோர்தான் நதி போன்ற சோதனையிலும் சோர்ந்தமிழ்ந்து மாளாதே ஆர்க்கும் ஜெயதொனியோடே பாதுகாத்த அன்பை என்றும் பாடுவேன் --- இயேசு 4. தாய் தன் பாலகனையே மறப்பினும் நான் மறவேன் என்று சொன்னதால் தாழ்த்தி என்னையவர் கையில் தந்து ஜீவ பாதை என்றும் ஓடுவேன் --- இயேசு 5. பூமியகிலமும் சாட்சியாகவே போங்களென்ற கட்டளையதால் ஆவி ஆத்துமாவும் தேகம் யாவுமின்று தந்து தொண்டு செய்குவேன் --- இயேசு