ஆத்துமமே என் முழு உள்ளமே உன் அற்புத தேவனையே ஸ்தோத்திரி பொங்கிடுதே என் உள்ளத்திலே பேரன்பின் பெரு வெள்ளமே
2. கருணையாய் இதுவரை கைவிடாமலே கண்மணிபோல் எமைக் காத்தாரே கவலைகள் போக்கி கண்ணீர் துடைத்தார் கருத்துடன் பாடிடுவோம் 3. படகிலே படுத்து உறங்கினாலும் கடும் புயல் அடித்து கவிழ்த்தினாலும் கடலையுங் காற்றையும் அமர்த்தியெமைக் காப்பாரே அல்லேலூயா 4. யோர்தானைக் கடப்போம் அவர் பெலத்தால் எரிகோவைத் தகர்ப்போம் அவர் துதியால் இயேசுவின் நாமத்தில் ஜெயம் எடுத்தே என்றென்றுமாய் வாழ்வோம் 5. பரிசுத்தவான்களின் பாடுகளெல்லாம் அதி சீக்கிரமாய் முடிகிறதே விழிப்புடன் கூடித் தரித்திருப்போம் விரைந்தவர் வந்திடுவார்