அந்தோ கல்வாரியில் – அருமை இரட்சகரே
சிறுமை அடைந்தே தொங்கினார்
மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்
கொடுமைக் குருசைத் தெரிந்தெடுத்தாரே
மாய லோகத்தோ டழியாது யான்
தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே
அழகும் இல்லை, சௌந்தரியம் இல்லை
அந்தக்கேடுற்றார் எந்தனை மீட்க
பல நிந்தைகள் சுமந்தாலுமே
பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே
முள்ளின் முடியும் செவ்வங்கி அணிந்தும்
கால் கரங்கள் ஆணிகள் பாய்ந்தும்
குருதி வடிந்தவர் தொங்கினார்
வருந்தி மடிவோரையும் மீட்டிடவே
அதிசயம் இது, இயேசுவின் தியாகம்!
அதினும் இன்பம் அன்பரின் தியானம்
அதை எண்ணியே நிதம் வாழுவேன்
அவர் பாதையை நான் தொடர்ந்தேகிடவே
சிலுவைக் காட்சியைக் கண்டு முன்னேறி
சேவையே புரிவேன் ஜீவனும் வைத்தே
என்னைச் சேர்த்திட வருவேன் என்றார்
என்றும் உண்மையுடன் நம்பி வாழ்ந்திடுவேன