அல்லேலூயா துதிமகிமை – என்றும்
இயேசுவுக்கே செலுத்திடுவோம்
ஆ அல்லேலூயா ஆ அல்லேலூயா(3)
1. சிலுவையை சுமப்பாயா
உலகத்தை வெறுப்பாயா – ஆ – ஆ
உலகத்தை வெறுத்து இயேசுவின்
பின்னே ஒடி வருவாயா
2. மோட்சத்தை அடைந்திடவே
பாடுகள் படவேண்டும் – ஆ -ஆ
பாடுகள் மத்தியில் பரமன்
இயேசுவில் நிலைத்தே நிற்கவேண்டும்
3. ஜெபத்திலே தரிந்திருந்து
அவர் சித்தம் நிறைவேற்று – ஆ – ஆ
முடிவு பரியந்தம் அவரில் நிலை நிற்க
பெலனைப் பெற்றுக்கொள்ளு – அல்
4. சென்றவர் வந்திடுவார்
அழைத்தே சென்றிடுவார் – ஆ – ஆ
அவருடன் செல்ல ஆயத்தமாவோம்
அவருடன் வாழ்ந்திடவே – அல