அழைக்கின்றேன் அன்புள்ள ஆண்டவரே
ஆவியில் கலங்கும் போது
இயேசுவே பதில் தாருமே
1. செங்கடல் எதிர் நோக்கினும்
சேனைகள் பின் தொடர்ந்தும்
மங்காத வாக்குகளால்
மோசேயை நடத்தினீரே – அழை
2. அக்கினி சூளையிலும் அருகினில்
நடந்தது போல் பக்கத்தில்
என் பாதையில் பரிசுத்தர்
கரம் நீட்டுமே – அழை
3. எலியாவின் தேவன் எங்கே
இடரல்கள் பெருகும் போது
யோர்தான் பிளந்திடவே
இயேசுவே துணை வாருமே – அழை