ஆதியில் வார்த்தையாக இருந்த எங்கள் இயேசுவே
மனிதனை மீட்க நீரே மண்ணில் வந்தீரே
இருளில் ஒளியாக வந்த எங்கள் வெளிச்சமே
வழியாய் வந்த இயேசுவே
இயேசுவே இம்மானுவேலரே
மனிதனை மீட்க வந்த மகா பிரபுவே
பொன்னை கேட்கல உன் பொருளையும் கேட்கல
சொத்த கேட்கல உன் சம்பத்த கேட்கல
உன்னை கேட்கிறார் உன் உள்ளத்தை கேட்கிறார்
மகனாய் உன்னை மாற்றுவார்
மகளாய் உன்னை மாற்றுவார்
சாபத்தின் கட்டுகளை உடைக்க வந்த இயேசுவே
எனக்காய் சாபமானீர் சிலுவை மீதிலே
பாவத்தின் சம்பளத்தை நான் செலுத்த தேவை இல்ல
எனக்காய் செலுத்திவிட்டாரே
இயேசு செலுத்திவிட்டாரே