ஆமென், அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா
ஆமென், அல்லேலூயா, ஜெயம்! ஜெயம் ஆனந்த
ஸ்தோத்திரா,
ஓம் அனாதி தந்தார், வந்தார், இறந்
துயிர்த்தெழுந்தாரே, உன்னதமே!
வெற்றிகொண் டார்ப்பரித்து – கொடும்வே
தாளத்தைச் சங்கரித்து, – முறித்து
பத்ராசனக் கிறிஸ்து – மரித்து
பாடுபட்டுத்தரித்து, முடித்தார், – ஆமென்
சாவின் கூர் ஒடிந்து, – மடிந்து,
தடுப்புச் சுவர் இடிந்து, – விழுந்து,
ஜீவனே விடிந்து, – தேவாலயத்
திரை ரண்டாய்க் கிழந்து ஒழிந்தது – ஆமென்
வேதம் நிறைவேற்றி, – மெய் தோற்றி,
மீட்டுக் கரையேற்றி, – பொய் மாற்றி,
பாவிகளைத் தேற்றி, – கொண்டாற்றி,
பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார், – ஆமென்.