ஆவியான எங்கள் தேவனே
உம்மை அன்போடு அழைக்கிறோம் ஐயா
அடியார்கள் எங்களை உம் அபிஷேகத்தால்
ஆட்கொண்டு நடத்தும் ஐயா – உம்
ஆன்பினாலே நிரப்பும் ஐயா
தேற்றிடும் எங்கள் தேற்றரவாளன் நீரே
ஊற்றிடும் எங்கள் மீது உம் அபிஷேகமே-2
மாற்றிடும் எங்கள் மாறாக் காயங்களை
நீக்கிடும் எங்கள் பெலவீனங்கள (2)
சத்தியத்தை போதிக்கின்ற போதகர் நீரே
சகலத்தை அறிகின்ற ஞானமும் நீரே -2
அற்புதங்கள் செய்திடும் என் துணையாளரே
அனைத்திற்காய் ஜெபிக்கின்ற ஜெபவீரரே – 2
தாயைப் போல தேற்றுகின்ற அன்பு தெய்வமே
தந்தை போல அணைக்கின்ற இன்ப தெய்வமே
ஏற்ற வேளை உதவிடும் என் அன்பு நண்பரே
இந்த வேளை எங்களுக்காய் உதவிடுமே – 2