ஆவியே வாருமே
ஆவியே வாருமே
ஜீவன் தாருமே
ஜெயத்தை தாருமே
அக்கினி ஊற்றிடுமே
என்னை அனலாய் மாற்றுமே
எங்கள் உள்ளங்கள் நிரம்பட்டும்
வறண்டு போன நிலத்தை போல
என் உள்ளம் ஏங்குதே
தூய ஆவி தேவ ஆவி
மழை போல் வாருமே
வியாதியோடு கஷ்டப்படுவோர்
உம் சுகத்தை பெறனுமே
சுகமாக்கும் தேவ ஆவி
இப்போ இறங்கி வாருமே