இந்த மட்டும் காத்த எங்கள்
தேவனுக்கு ஸ்தோத்திரம்
இனிமேலும் காக்கும் எங்கள்
அன்பருக்கு ஸ்தோத்திரம் – (2)
அவரை நான் எக்காலத்திலும்
துதிப்பேன் போற்றுவேன்
நிதம் நன்றி சொல்லி மகிழ்ந்திடுவேன்
அவர் பாதம் வந்து அமர்ந்திடுவேன்
அவர் குரல் கேட்டிடுவேன்
1) பயப்படாதே என்று அவர் சொல்லி
வலக்கையை பிடித்து துணைநின்றார்
எண்ணிலா கிருபைகள் தந்து
அவர் சமூகத்தில் மகிழச் செய்திட்டார்
என் வாழ்விலே அவர் செய்த
அதிசயம் அளவிடவே முடியாது
அதை நான் இனி நன்றிகள்
சொல்ல அந்த வார்த்தை போதாது.
2) திராணிக்கு மேல் நான் சோதிக்கப்பட
ஒருபோதும் விடாமல் காத்திட்டார்
நன்மையான ஈவுகள் தந்து
பனைப்போல் செழிக்க செய்திட்டார்
அலைச்சல் யாவும் நினைவுக் கூர்ந்து
கண்ணீரை துருத்தியில் வைத்திட்டார்
ஒலிவமரக் கன்றுகளைப் போல்
ஆலயத்தில் நிற்கச் செய்திட்டார்