இயேசுவே எந்தன் போஜனம்
இயேசுவே எந்தன் ஜீவ மன்னா
இயேசுவே எந்தன் ஜீவ அப்பம்
தாகத்தை தீர்த்திடும் ஜீவ நதி
1. பாவக் கொடுமையால் நாவறண்ட போது
பார்த்து கசிந்து உள்ளம் நொறுங்கி – 2
கல்வாரி சிலுவையில் தன்னைப் பிழிந்தார்
இரத்தத்தைப் பருக பானமாய் தந்தார் – இயேசுவே
2. தாயென்னை மறந்து தள்ளின போது
தகப்பன் வெறுத்து பகைத்த போதும – 2;
ஆணிகள் பாய்ந்த கரங்கள் கொண்டு
ஆழாதே நானுண்டெனக் கண்ணீர் துடைத்தார்
3. உள்ளத்தின் வேதனை மிஞ்சிடும் நேரம்
உண்மையாய் அணைக்கும் அன்பரின் கரம்
பக்கமாய் நின்று தேற்றிடுவாரே
பரிதபித்தன்பாய் வேண்டிடுவாரே – இயேசுவே
4. அன்புக்கு ஏங்கின அனாதை எனக்கு
அன்பர் என் இயேசுவே எல்லாமு மானார்
எனக்கும் நீதான் எல்லாமுமென்றார்
தாயாய் தகப்பனாய் நண்பனாய் ஆனார்