இன்னமும் தாமதமேன்
இன்பச் சத்தம் கேளாயோ
இன்னலின்று காத்திட
இன்றுன்னை அழைக்கிறாரே
ஜீவனின் அதிபதி இயேசுவண்டை
நித்திய ஜீவன் உண்டே
நீங்கிடா அவர் அன்பையே
நாடி நீ வந்திடாயோ
1. கல்வாரி மேட்டினிலே
கரங்களை விரித்தவராய்
காத்து உன்னை இரட்சித்திட
கனிவுடன் அழைக்கிறாரே (ஜீவனின்)
2. லோகத்தின் இன்பமெல்லாம்
மாறிடும் ஷணப்பொழுதில்
மாறிடா நேசர் இயேசு
மாண்புடன் அழைக்கிறாரே (ஜீவனின்)
3. நாளை உன் நாளாகுமோ
நாடாயோ நாதனை நீ
நாசலோகை மீட்டிட
நாதன் அழைக்கிறாரே (ஜீவனின்)