உணர்வின் பிரபுவே
உணர்வின் இராஜா
வந்திடுமே தயவாய்
தேவ ஜனத்தின் சபையில்
2. உறக்கத்தில் இருக்கும் ஜனம்
மறந்தோர் நின் கிருபைகள்
ஆதி அப்போஸ்தலர் பகர்ந்த
நின் கிருபைகளை தந்திடும் ஆத்ம நாதா
3. என் சொந்த வீட்டில் தளர்ந்து
பெலனற்று கிடக்கும் நேரம்
ஆதரவாய் திரு சன்னதியில் வருகிறேன்
அடைக்கலம் தாரும் நாதா
4. வாழ்க்கையில் மண் மேடுகள்
துன்பங்கள் காணும் வேளை
கொஞ்சமும் தளராது தைரியமாய் ஜெயித்திட
வல்லமை தாரும் நாதா
5. அழைத்த அழைப்பில் என்றும்
நிலைக்கும் போர் வீரனாய்
உண்மையாய் ஊழியம் குற்றமற்று நடக்க
விளங்க செய்யும் நாதா
6. வானில் ஆரவாரம்
சத்தங்கள் முழங்கும் போது
உம்மில் மகிழ்ந்து வரவேற்பு செய்திட
தகுதி படுத்தும் நாதா