உம்மைத் தவிர யாருமில்லையே
என் இயேசய்யா
1. கண்ணீரின் பாதையில் கடந்து நானும் போகையிலே
கரம் பிடித்து நடத்திடவோ யாருமில்லையே
2. நண்பரெல்லாம் நழுவும் போது உறவெல்லாம் பிரியும் போது
சொந்தமென்று சொல்லிக்கொள்ள யாருமில்லையே
3. மாயமான உலகத்திலே மண்ணாகி போகையிலே
மறுமையிலே சேர்த்துக் கொள்ள யாருமில்லையே