உலகமோ மறந்தது
என்னை உறவுகள் வெறுத்தது
உள்ளமோ உடைந்தது
உயிர் வாழ்ந்திட கசந்தது
தனிமையை விரும்பினேன் கண்ணீரோடு கதறினேன்
கவலையில் மூழ்கினேன்
உறக்கம் இல்லாமல் தவித்தேன்
உண்மை அன்பை தேடியே
நான் ஏமாந்து போனேனே
உலகம் எங்கும் நான் கண்டது மாயையே
உம் அன்பு ஒன்று தான் என்னை வாழ வைத்தது
சிலுவை நிழல் தான் என்னை இன்றும் காப்பது