உன்னத தேவன் மறைவிலிருக்கும்
எனக்கு பயமில்லை
வல்லவர் நிழலில் தங்கும்
எனக்கு என்றும் பயமில்லை.
ஆமென் அல்லேலூயா -3.
1. தேவனை நோக்கி அடைக்கலம்
கோட்டை-நம்பிக்கை என்பேனே ,
கொள்ளை நோய்க்கும்
வேடன் கன்னிக்கும்
என்னை தப்புவிப்பார்
2. அடைக்கலமான தேவன்
எனக்கு தாபரமாய் உள்ளார்
பொல்லாப்பு வாதை
அணுகாது என்னை
என்றும் காத்திடுவார்
3. தேவனை நோக்கி கூப்பிடும் நேரம்
எனக்கு பதில் தருவார்,
ஆபத்து நேரம் என்னோடு இருந்து
என்னைக் காத்திடுவார்
4. சிங்கத்தின் மேலும், பாம்பின் மேலும்
நடந்தே சென்றிடுவேன்,
தேவனை நம்பி உயர்ந்த அடைக்கலம்
என்றும் பெற்றிடுவேன்
5. தேவனிடத்தில் வாஞ்சையாய்
இருக்கும்-என்னை விடுவிப்பார்
அவர் நாமத்தை அறிந்த எனக்கு
உயர்ந்த அடைக்கலம் தந்திடுவார்