எகிப்திலிருந்து கானானுக்கு கூட்டிச் சென்றீரே
உமக்கு கோடி நன்றி ஐயா
அல்லேலூயா அல்லேலூயா
கடலும் பிரிந்தது மனமும்
மகிழ்ந்தது கர்த்தரை என்றும்
மனது ஸ்தோத்திரித்தது
பாறையினின்று தண்ணீர்
சுரந்தது தாகம் தீர்ந்தது
கர்த்தரை மனமும் போற்றியது
வெண்கல சர்ப்பமானாரே
நமக்காய் உயிர் கொடுத்தாரே
அவரை உயர்த்திடுவோமே
யோர்தானைக் கடந்தோம்
எரிகோவை தகர்த்தோம்
ஜெயம் கொடுத்தாரே
அவரை துதித்திடுவோமே