எந்தன் கன்மலையானரே
என்னை காக்கும் தெய்வம் நீரே
வல்லமை மாட்சிமை நிறைந்தவரே
மகிமைக்கு பாத்திரரே
ஆராதனை உமக்கே – 8
உந்தன் சிறகுகளின் நிழலில்
என்றென்றும் மறைய செய்தீர்
தூயவரே என் துணையாளரே
துதிக்கு பாத்திரரே
ஆராதனை உமக்கே – 8
எந்தன் பெலவீன நேரங்களில்
உம் கிருபை தந்தீரையா
இயேசு ராஜா என் பெலனானீர்
எதற்கும் பயமில்லையே
ஆராதனை உமக்கே – 8
எந்தன் உயிருள்ள நாட்களெல்லாம்
உம்மை புகழ்ந்து பாடிடுவேன்
ராஜா நீர் செய்த நன்மைகளை
எண்ணியே துதித்திடுவேன்