கரம் பிடித்து உன்னை என்றும் நடத்திடுவார்
கண்மணிப் போல் உன்னை
என்றும் காத்திடுவார்
கலங்கிடாதே திகைத்திடாதே
கர்த்தர் கரம் உனக்குண்டு பயந்திடாதே
படுகுழியில் நீ விழுந்தாலும்
பரத்திலிருந்து வந்து உன்னைத் தூக்கிடுவார்
அக்கினியில் நீ நடந்தாலும்
எதுவும் உன்னை சேதப்படுத்த முடியாதே
கலங்கிடாதே திகைத்திடாதே
கர்த்தர் கரம் உனக்குண்டு பயந்திடாதே
ஆறுகளை நீ கடந்தாலும்
அவைகள் என்றும் உன் மீது புரள்வதில்லை
காரிருளில் நீ நடந்தாலும்
பாதைக்கு வெளிச்சமாக இருப்பாரே
கலங்கிடாதே திகைத்திடாதே
கர்த்தர் கரம் உனக்குண்டு பயந்திடாதே