சாந்த இயேசே, கேளும் வேண்டல் 1. சாந்த இயேசே, கேளும் வேண்டல் தள்ளா தேழையை மற்றோரை அழைத்தீர், என்மேல் காட்டும் உம்தயை. இயேசே, இயேசே, கேளும் ஏழையை; மற்றோரை அழைத்தீர், என்மேல் காட்டும் உம்தயை. 2. உம் கிருபாசனம் சேர்கையில் ஆறுதல் தாரும்; நைந்த நெஞ்சொடு கேட்கையில் நம்பிக்கை தாரும். இயேசே, இயேசே, கேளும் ஏழையை; மற்றோரை அழைத்தீர், என்மேல் காட்டும் உம்தயை. 3. உம் புண்ணியம் நம்பிச் சேர்வேன் உம் தயை தேடி; காயம் நோவு யாவும் நீங்கும் உம் கிருபையால். இயேசே, இயேசே, கேளும் ஏழையை; மற்றோரை அழைத்தீர், என்மேல் காட்டும் உம்தயை. 4. ஆறுதலின் ஊற்று நீர்தாம் என்றன் ஜீவனே பூமியில் என் துணை நீர் தாம் வீண்ணிலும் நீரே. இயேசே, இயேசே, கேளும் ஏழையை; மற்றோரை அழைத்தீர், என்மேல் காட்டும் உம்தயை.