இயேசு இராஜனின் திருவடிக்கே இயேசு இராஜனின் திருவடிக்கே சரணம், சரணம், சரணம். ஆத்ம நாதனின் மலரடிக்கே சரணம், சரணம், சரணம். 1. மாதூயர் தூயர் எனப்போற்றிடும் விண் தூதரோடே நாமும் போற்றுவோம் மாதேவசபை பூவில் வாழ்த்தவே சரணம், சரணம், சரணம். இயேசு இராஜனின் திருவடிக்கே சரணம், சரணம், சரணம். ஆத்ம நாதனின் மலரடிக்கே சரணம், சரணம், சரணம். 2. ஆயனே தூய அருள் நாதனே - மெய் வேதனே திவ்ய வாசனே - என் ஜீவனே ஆத்ம நேசனே சரணம், சரணம், சரணம். இயேசு இராஜனின் திருவடிக்கே சரணம், சரணம், சரணம். ஆத்ம நாதனின் மலரடிக்கே சரணம், சரணம், சரணம். 3. துன்ப துயரம் சூழும் வேளையும் - வெகு கஷ்ட நஷ்டம் வரும் நாளிலும் அன்பருக் கருள் தரும் இன்பமே சரணம், சரணம், சரணம். இயேசு இராஜனின் திருவடிக்கே சரணம், சரணம், சரணம். ஆத்ம நாதனின் மலரடிக்கே சரணம், சரணம், சரணம். 4. ஆடுபோல அடிக்கப்பட்டீரே - அன்பால் தேடி எமை மீட்க வந்தீரே - எங்கள் ஜீவ பலியாக மாண்டீரே சரணம், சரணம், சரணம். இயேசு இராஜனின் திருவடிக்கே சரணம், சரணம், சரணம். ஆத்ம நாதனின் மலரடிக்கே சரணம், சரணம், சரணம்.