அல்லேலூயா கர்த்தரையே 1. அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள் அவர் நடத்தும் செயல்களெல்லாம் பார்த்தோரே துதியுங்கள் வல்லமையாய்க் கிரியை செய்யும் வல்லோரைத்துதியுங்கள் எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் இயேசுவைத் துதியுங்கள். இராஜாதி இராஜனாம் இயேசுராஜன் பூமியில் ஆட்சி செய்வார்; அல்லேலூயா அல்லேலூயா தேவனைத் துதியுங்கள். 2. தம்புரோடும், வீணையோடும் கர்த்தரைத் துதியுங்கள் இரத்தத்தினால் பாவங்களைப் போக்கினார் துதியுங்கள் எக்காளமும், கைத்தாளமும் முழங்கிடத் துதியுங்கள் எக்காலமும் மாறாதவர் இயேசுவைத் துதியுங்கள். இராஜாதி இராஜனாம் இயேசுராஜன் பூமியில் ஆட்சி செய்வார்; அல்லேலூயா அல்லேலூயா தேவனைத் துதியுங்கள். 3. சூரியனே, சந்திரனே தேவனைத் துதியுங்கள் ஒளியதனை எங்கள் உள்ளம் அளித்தோரைத் துதியுங்கள் அக்கினியே, கல்மழையே படைத்தோரைத் துதியுங்கள் அக்கினியாய் கல்மனதை உடைப்போரைத் துதியுங்கள். இராஜாதி இராஜனாம் இயேசுராஜன் பூமியில் ஆட்சி செய்வார்; அல்லேலூயா அல்லேலூயா தேவனைத் துதியுங்கள். 4. பிள்ளைகளே, வாலிபரே தேவனைத் துதியுங்கள் வாழ்வதனை அவர் பணிக்கே கொடுத்து நீர் துதியுங்கள் பெரியவரே, பிரபுக்களே தேவனைத் துதியுங்கள் செல்வங்களை இயேசுவுக்காய் செலுத்தியே துதியுங்கள். இராஜாதி இராஜனாம் இயேசுராஜன் பூமியில் ஆட்சி செய்வார்; அல்லேலூயா அல்லேலூயா தேவனைத் துதியுங்கள். 5. ஆழ்கடலே, சமுத்திரமே தேவனைத் துதியுங்கள் அலை அலையாய் ஊழியர்கள் எழும்பினார் துதியுங்கள் தூதர்களே, முன்னோடிகளே தேவனைத் துதியுங்கள் பரலோகத்தை கிறிஸ்தவர்கள் நிரப்புவார் துதியுங்கள். இராஜாதி இராஜனாம் இயேசுராஜன் பூமியில் ஆட்சி செய்வார்; அல்லேலூயா அல்லேலூயா தேவனைத் துதியுங்கள்.