அனைத்தும் கிறிஸ்துவுக்கே - எந்தன் அனைத்தும் அர்ப்பணமே என் முழு தன்மைகள் ஆவல்களும் அனைத்தும் கிறிஸ்துவுக்கே
2. என் எண்ணம் போல நான் அலைந்தேனே என்னைத் தடுத்திட்ட தாருமில்லை உம் சிலுவை அன்பை சந்தித்தேனே நொறுங்கி வீழ்ந்தேனே உம் பாதத்தில் 3. ஐம்புலன்கள் யாவும் அடங்கிட ஐம்பெருங் காயங்கள் ஏற்ற நாதா வான் புவி கிரகங்கள் ஆள்பவரே என்னையும் ஆண்டிட நீரே வல்லோர் 4. என் வாழ்வில் இழந்த நன்மைக்கீடாய் எஞ்சிய நாட்களில் உழைப்பேனே நீர் தந்த ஈவு வரங்கள் யாவும் உம் பணி சிறந்திட முற்றும் தந்தேன்