அல்லேலூயா! அல்லேலூயா! என்றெல்லாரும் பாடிடுவோம் அல்லலில்லை! அல்லலில்லை! ஆனந்தமாய்ப் பாடிடுவோம்
2. புதிய புதிய பாடல்களைப் புனைந்தே பண்களும் சேருங்களே! துதிகள் நிறையும் கானங்களால் தொழுதே இறைவனைக் காணுங்களே! 3. நெஞ்சின் நாவின் நாதங்களே! நன்றி கூறும் கீதங்களால் மிஞ்சும் ஓசைத் தாளங்கலால் மேலும் பரவசம் நாடுங்களே! 4. எந்த நாளும் காலங்களும் இறைவனைப் போற்றும் நேரங்களே! சிந்தை குளிர்ந்தே ஆண்டுகளாய் சீயோனில் கீதம் பாடுங்களே!