இந்த தேவன் என்றென்றுமுள்ள சதா காலமும் நமது தேவன் மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார்
1. காருண்யத்தாலே இழுத்துக் கொண்டார் தூய தேவ அன்பே இவ்வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னை இனிதாய் வருந்தி அழைத்தார் --- இந்த 2. கானகப் பாதை காரிருளில் தூய தேவ ஒளியே அழுகை நிறைந்த பள்ளத் தாக்குகளை அரும் நீரூற்றாய் மாற்றினாரே --- இந்த 3. கிருபை கூர்ந்து மன துருகும் தூய தேவ அன்பே உன் சமாதானத்தின் உடன்படிக்கைகளை உண்மையாய் கர்த்தர் காத்துக்கொள்வார் --- இந்த 4. இப்புவி யாத்திரை கடந்திடுவாய் தூய தேவ தயவால் கடும் கானகத்தில் கர்த்தர் மார்பினிலே கிடைக்கும் இளைப்பாறுதலே --- இந்த 5. வறண்ட வாழ்க்கை செழித்திடுமே தூய தேவ அருளால் நித்திய மகிழ்ச்சி தலைமேல் இருக்கும் சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போம் --- இந்த 6. ஆனந்தம் பாடித் திரும்பியே வா தூய தேவ பெலத்தால் சீயோன் பர்வதம் உன்னைச் சேர்த்திடுவார் சந்ததம் மகிழ்ச்சி அடைவாய் --- இந்த