இயேசு நேசிக்கிறார்
அவர் அன்பாய் நேசிக்கின்றார்
பாவி நான் என்றாலும் தள்ளிவிடாமலே
பாதுகாக்கின்றார் கிருபை தருகிறார்
1. அழைத்தேனே நெருக்கத்திலே
அன்போடு செவி கொடுத்தீர் – ஆபத்து
காலத்திலே அரணான துணையானீர்
ஆத்துமத்தில் என்னை முழு மனதுடன்
அரவணைத்தாரே அன்பை அளித்தாரே – இயேசு
2. மாசற்ற தம் உதிரம் எனக்காக சிலுவையிலே
மனதார அளித்தவரை மனம் நோக செய்தேனே
மனசாட்சி தீவினை மன்னித்து வாழ்வினை மாற்றி
அமைத்தாரே மகிழச் செய்தாரே- இயேசு