இறுதி இராப்போஜன விருந்ததிலே
இரட்சகர் வீற்றிருந்தார்
இயேசு பன்னிரு சீஷருடனே
1. அப்பமதை எடுத்தவர்
ஆசீர்வதித்ததை பிட்டுத் தந்தார்
எந்தன் சரீரம் இதுவே
என்றே பரிமாறினார் – இறுதி
2. பாத்திரத்தில் நவரசம்
பாவத்தைக் கழுவின தூய இரத்தம்
இரட்சண்ய புது உடன்படிக்கையே
இதைப் பானம் பண்ணினார் – இறுதி
3. அன்பின் சீஷன் ஆறதலாய்
அண்ணலின் மார்பினில் சாய்ந்திருந்தான்
துரோகியாம் யூதாஸ் துணிக்கையும் வாங்கி
தீவிரம் போய் மறைந்தான் – இறுதி
4. சரீரமாம் சபையிலே
சத்திய ஆவியால் இணைத்தாரே
நன்றியும் பொங்க நிலைத்து நின்றாலே
நற்கருணை ஈகுவார் – இறுதி
5. கபடற்ற மனதுடன்
கிறிஸ்துவின் மன்னிக்கும் சிந்தையுடன்
சந்தோஷமாக சமாதானமாக
பந்தியில் பங்கடைவோம் – இறுதி
6. பக்தரோடே சீயோனிலும்
பிதாவின் இராஜ்ஜிய பந்தியிலும்
வாஞ்சையாய் நாமும் வருகையில் சென்று
விரைந்து சேர்ந்து கொள்ளுவோம் – இறுதி