இன்று கண்ட எகிப்தியனை
என்றுமே இனி காண்பதில்லை
இஸ்ரவேலை காக்கும் தேவன்
உறங்கவில்லை தூங்கவில்லை
1. கசந்தமாரா மதுரமாகும்
வசந்தமாய் உன் வாழ்க்கை மாறும்
கண்ணீரோடு நீ விதைத்தால்
கெம்பீரமாய் அறுத்திடுவாய் (இஸ்ரவேலை)
2. தண்ணீரை நீ கடக்கும் போது
கண்ணீரை அவர் துடைத்திடுவார்
வெள்ளம்போல சத்துரு வந்தால்
ஆவியால் கொடியேற்றிடுவார் (இஸ்ரவேலை)
3. வாதை உந்தன் கூடாரத்தை
அநுகாமலே காத்திடுவார்
பாதையிலே காக்கும்படிக்கு
தூதர்களை அனுப்பிடுவார் (இஸ்ரவேலை)
4. சோர்ந்துபோன உனக்கு அவர்
சத்துவத்தை அளித்திடுவார்
கோரமான புயல் வந்தாலும்
போதகத்தால் தேற்றிடுவார் (இஸ்ரவேலை)