இனிமையான நேரம் இன்பமான நேரம்
உம் திருபாதம் அமர்வதே – இயேசய்யா (2)
1) பாதம் அமர்ந்தால் பயங்கள் நீங்கிடும்
வேதம் அறிந்தால் வேதனை மாறிடும்
உமது அன்பு பெரிதல்லவோ – இயேசய்யா (2)
உமது அன்பிலே அடிமை வாழ்ந்திட வேண்டும்
2) கவலை கண்ணீர்கள் களிப்பாய் மாறிடும்
கஷ்ட நஷ்டங்கள் கறைந்து ஓடிடும்
உமது உண்மை பெரிதல்லவோ – இயேசய்யா (2)
உமது உண்மையில்(லே)அடிமை வாழ்ந்திட வேண்டும்
3) பாவ சாபங்கள் ஓடி மறைந்திடும்
புதிய இதயமே துதித்துப் பாடிடு
உமது கிருபை பெரிதல்லவோ – இயேசய்யா (2)
உமது கிருபையில் அடிமை வாழ்ந்திட வேண்டும்