இஸ்ரவேலே உன்னை காக்கும் தேவன்
உறங்குவதில்லை தூங்குவதில்லை
இனியும் கலங்குவதேன் – நீயும்
பார்வோனின் சேனைகள்
உன்னை தொடர்ந்து வந்த போது
தம் கரத்தால் செங்கடலை பிளந்தாரே
இஸ்ரவேலைக் காக்கிறவர் நம் தேவனே
அவர் மாறிடாரே
வனாந்திர யாத்திரையில்
நீயும் சோர்ந்து போகையிலே
தம் சமுகம் உன்னுடனே இருந்ததே
இஸ்ரவேலைக் காக்கிறவர் நம் தேவனே
அவர் விலகிடாரே